Thursday, July 14, 2011

தெனாலி ராமனின் ஊழல் பூனையும், கொதிக்கும் லோக்"பாலும்"

ஜன் லோக்பால் சட்டம் வந்தால் ஊழல் ஒழிப்பு நிச்சயம் தீவிரம் அடையும் என்ற எண்ணம் மக்களிடையே வலுத்துள்ளது. பாலை சுவைக்காத பூனையும் உண்டா என்ற கேள்வியையே சவாலாக ஏற்று கிருஷ்ணதேவராயரிடம் வென்று காட்டிய தெனாலி ராமனின் கதை தான் இங்கு நினைவிற்கு வருகிறது. முயன்றால் முடியாத நல்ல விஷயம் இல்லை என்பதற்கு அவரது வெற்றி ஒரு சான்று.


கொதிக்கும் பாலை பூனைக்கு கொடுத்தார் தெனாலி ராமன். பாலின் சூடு பட்டதும் தெறித்து ஓடியது பூனை. அதன் பிறகு எப்போது பாலைப் பார்த்தாலும் பூனை மிரண்டது. இக்காலத்திலும், சில ஊழல் பூனைகள் பால் போன்ற நமது நாட்டின் சத்துக்களையும் வளங்களையும் கபளீகரம் செய்து வருகின்றன. அதிகாரச்சுவை கண்ட இப்பூனைகள், "கொதித்து"ப்போன மக்கள் கொண்டு வரத்துடிக்கும் லோக்”பாலின்” சூட்டைக்கண்டு மிரள்வது தான் இப்போது நடக்கிறது. அந்த ஊழல் பூனை போடும் கூத்துக்களை மக்கள் அறிந்து வைத்துத்தான் இருக்கிறார்கள்.


எப்போது சட்டத்தை வளைத்தே பழகியவர்கள் இப்போது ஒரு சட்டத்தின் முன் தாங்கள் வளைய வேண்டிவரும் என்ற நினைப்பை கண்டு பயப்படுவது வியப்பத்ற்கில்லை.இவ்வாறு நாட்டுமக்கள் நாட்டின் நலனுக்காக ஒன்றுபட்டு நின்று "ஜன் லோக்பால்" மசோதாவை அமல்படுத்தச்செய்தால், ஊழல் பூனை பால் போன்ற சத்தான நமது நாட்டின் வளங்களை சுரண்டவும் ருசிக்கவும் பயந்து விலகுவது உறுதி.



-குழலவன்.



Click here to follow this blog | இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்

No comments:

Post a Comment