Friday, December 30, 2011

"உண்மை விளம்பிகளின்" உண்மை முகம்!!


நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனைச் செய்வாரடி ‍- கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி!!
                                                                   - பாரதியார்

அன்னா ஹஜாரே பிடியை சற்று தளர்த்தினாரோ, உடனே அரசியல் வாதிகளுக்கு மீண்டும் வால் முளைத்து விட்டது. ஆளுங்கட்சி லோக்பால் என்ற பெயரில் ஒரு "அஞ்சலகத்தை" மட்டும் உறுவாக்க முயல்கிறது என்றால், ஊரில் இருக்கும் மற்ற நண்டு சுண்டு கட்சிகளும் உருப்படாத சில "மாற்றங்களைக்" கொண்டுவர முனைந்தனவாம், இதனால் தான் ஒரு முடிவும் எடுக்காமல் நேற்று இரவு கூட்டத்தொடரை முடித்துக் கொண்டார்களாம். முக்கியமானசிக்கலானவற்றை எப்படி தட்டிக்கழிப்பது என்று இவர்களிடம் பாடம் கற்க வேண்டும். பெண்டாட்டியிடம் பதில் சொல்ல முடியாமல் திருதிருவென விழிக்கும் கணவன்மார்களுக்கு அந்த பாடங்கள் பெரிதும் உதவும்.

இவர்களின் கூத்து இப்படி இருக்க ஊரில் இருக்கும் வெறும்வாய்மெல்லிகளின் அலும்பல்கள் தாங்க முடிவதில்லை. தங்கள் சோம்பேறித்தனத்திற்கு தன்னை நோகாமல் பிறரிடம் குற்றம் கண்டுபிடிப்பது இவர்களின் முழுநேரத் தொழில். பெரும்பான்மையான கருத்திற்கு மாற்றுக்கருத்தைக் கூறினால் கவனத்தை ஈர்க்கும் என்பதனால் சில "பேப்பர் போராளிகள்" வெட்டியாக வதந்திகளைப் பரப்பிவருகின்றனர். அன்னா ஹஜாரேவைப் பற்றி ஒன்றுமே தெரிந்து கொள்ளாமல் (இரு நிமிடம் விக்கீ பீடியாவை பார்த்தாலே போதும்) அவர் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். மகாரஷ்டிராவில் பி.ஜெ.பி முதல்ரவர் முரளிமனோகர் ஜோஷியின் அமைச்சர்களை எதிர்த்துப் போராடி அவர்களைப் பதவி இழக்கச் செய்ததும், தென்நாட்டின் முதல் பி.ஜெ.பி முதல்வர் எடியூரப்பாவை பதவி விலகச்செய்த சந்தோஷ் ஹெக்டேவை முழுமையாக ஆதரிப்பதும் கூட தெரிந்து கொள்ள "விரும்பாமல்" அவர் பி.ஜெ.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்று பொய்ப் பிரசாரம் செய்கின்றனர்.


மக்கள் ஆட்சி என்பது, மக்கள் ஆட்சிசெய்வது தானே ஒழிய, மக்களை ஆட்சிசெய்வது இல்லை. இதற்காக அன்னா ஹஜாரே பெருவாரியான மக்களின் கருத்துகளைத் திரட்டி அதை ஒரு மசோதாவின் வடிவில் பாராளுமன்றத்தில் கொடுத்து சட்டமாக்கச் சொன்னார். இதுவே உண்மையான மக்களாட்சி. மக்கள் "பிரதிநிதி"கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் சிலர், மக்கள் "அதிபதி"களாக செயல் படுகின்றனர். ஒரு சாமானியனின் கேள்வி இது தான் "எனது கருத்துகளை கேட்கவே கேட்காத ஒருவரை எனது பிரதிநிதி என்று எப்படி ஒப்புக்கொள்வது?". இதில் பிழை இருப்பதாய் தெரியவில்லை. ஒரு இந்தியத் தூதர் "நான் இந்திய அரசின் பிரதிநிதி. அதனால் எதிரி நாட்டுடன் நான் போட்ட ஆயுத ஒப்பந்தம் செல்லும். இதனை இந்திய அரசு கேள்வி கேட்கக்கூடாது" என்று சொல்லமுடியுமா? இந்த சின்ன தகவல் கூடப் புரியாமல் அன்னா ஹஜாரேவை மக்களாட்சிக்கு எதிரி என்று கற்பிக்க முயல்கின்றனர்.

அவர்களுள் சிலர் இன்னும் ஒருபடி மேலே போய், "நான் முக்கியமாக நினைக்கும் பிரச்சனை தான் உலகத்திற்கே முக்கியமாக இருக்க வேண்டும். வேறு எதைப்பற்றியும் யாருக்கும் பேசக் கூட உரிமை இல்லை." என்று கூறுபவர்கள். அன்னா ஹஜாரே இதற்காகத் தான் முதலில் போராட வேண்டும் என்று கூறிவர். ஆனால் நீங்கள் இதுவரை அந்த பிரச்சனைக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டால் வெறும் வெறுமையே மிஞ்சுகிறது. இந்த காலிக் குடங்களுக்கு சத்தம் எழுப்புவது மட்டுமே தெரிந்திருக்கிறது.மாலை வந்தால் முழூபோதையில் திளைக்கும் இந்த "குடி"மக்களுக்கு அன்னா ஹஜாரே கள்ளச்சாராயத்தை ஒழிக்க தனது கிராமத்தில் பூரண மதுவிலக்கை பரப்பினார் என்று கூறினால் பிடிக்காதுதான். குடிவெறியால் தெருவினில்... ஏன்?... வீட்டிற்குள்ளும் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைப் பற்றி எல்லாம் இவர்கள் கவலைப் படுவது இல்லை. ஆனால் அந்த ஊர் மக்கள் இதனை கண்டித்தாலோ பெண்கள் இதனை தண்டித்தாலோ அதற்கு வன்முறை முத்திரை குத்த வந்துவிடுவார்கள். பிற்படுத்தப் பட்ட மக்களின் வாழ்கைத்தரத்தை உயர்த்தி, சாதி வேற்றுமையைத் தனது கிராமத்தில் களைந்த ஒரு உத்தமரின் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ளாமல்... தெரிந்து கொள்ள விரும்பாமல், அவரை பிற்படுத்தப் பட்டவரின் விரோதி என்று வதந்திகளைப் பரப்பும் வாய்மையாளர்களைப் பாராட்டுவதா? இல்லை இந்த பொய்களை பகுத்தறிவின்றி அப்படியே நம்பும் அறிவுஜீவிகளைப் பாராட்டுவதா?
இவ்வளவையும் தாண்டியே அந்த 74வயது முதியவர் போராட்டம் நடத்தினார். எப்போதுமே அன்னாவை எதிர்த்து வந்த "உண்மை விளம்பிகள்", இப்போது அவர் அந்தப் பக்கம் திரும்பிய உடனேயே பாராளுமன்ற உருப்பினர்கள் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டதற்கு பொறுப்பு ஏற்பார்களா? ஏமாற்றும் அரசியல் வாதிகளை எதிர்த்து நிற்பார்களா? தாங்களாகவும் எந்த நல்லதும் செய்யாமல், நல்லது செய்பவர்களையும் செய்யவிடாமல் இருக்கும் இவர்களைப் பற்றித் தான் பாரதி அன்றே கூறினாரோ:

நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனைச் செய்வாரடி ‍- கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி!!

-குழலவன்

Click here to follow this blog | இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்

Monday, December 12, 2011

வரம் தா கண்ணா!

தயிரைக் கடைந்த வெண்ணையைத் திருடுகிறாய்... இன்று
உயிரைக் கடைகிறாய் ... எதைத் திருடுவாயோ கண்ணா!!

சட்டியில் இருப்பதே அகப்பையில் வருவதால்
புத்தியில் நன்மையே சமைத்திடு கண்ணா

கலங்கிடும் போதும் நா கெட வேண்டாம் ‍ நிலை
தவறிய போதும் நெறி விட வேண்டாம்
பழகிய மனிதர்கள் கை விட்டாலும் ‍ கொண்ட‌
அழகிய ஒழுக்கங்கள் கை விட வேண்டாம்

இன்றிவை வரமென நீ தந்திடுவாய்
அன்றியும் நீயே செய்வித்திடுவாய்
உள்ளும் புறமும் உறைவாய் கண்ணா
உள்ளத்தின் உறவாய் மலர்வாய் கண்ணா!!

Friday, November 11, 2011

உண்ணா விரத்திற்கு முன்னர் எழுதியது!

காணவில்லை!! காணவில்லை!! காணவில்லை!!

பாடுபட்டு சம்பாதிச்சி கட்டிய‌ வரிப் பணம் பாதி வழியில் காணவில்லை!
பொது மக்கள் இதை இன்னும் தேடிக்கிட்டு இருக்கோம்!

இதை மாற்ற ஜன் லோக்பால் சட்டம் கொண்டு வர சரின்னு முதல்ல சம்மதிச்ச அரசியல் தலைவர்கள் போன இடம் தெரியவில்லை!
புலி மாதிரி இருக்குற ஜன் லோக்பால் சட்டத்துக்கு பூனை மாதிரி ஒரு லோக்பால் கொடுத்து இருக்காங்க! இது இங்க பொது மக்கள் யாருக்கும் புடிக்கலை!

அண்ணா ஹஜாரேன்னு ஒரு பெரியவர் உண்ணா விரதம் இருந்து இதை தேடப் போகிராராம். நாங்களும், எங்களுக்கு தேவையான ஜன் லோக்பால் சட்டம் கிடைக்கற வரைக்கும் உண்ணா விரததில் காத்துக்கிட்டு இருக்கப் போகறோம்!

இதையே தேடுறவங்களும் கண்டுபிடிச்சவங்களும் வர வேண்டிய முகவரி

153, சுரேந்திரா டெவெலபர்ஸ், எல். பி. சாலை, திருவான்மயூர், சென்னை 14

நேரம்: ஆகஸ்ட் 16 காலை 10 தொடங்கி ......

எங்களை நீங்க அடையாளம் தெரிஞ்சிக்க: வந்தே மாதரம் சொல்லிக்கிட்டு இருப்போம், கையில தேசிய கொடி இருக்கும், கூட 2 சுதந்திர போராட்ட தியாகிகள் இருப்பாங்க!


இப்படிக்கு,
வரி பணத்தையும் சில சுத்ந்திரத்தையும் தொலைச்சாலும், உணர்வையும் மானத்தையும் தொலைக்காத சில இந்தியர்கள்

*மக்கள் நலனில் வெளியிடுவோர்: இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம், சென்னை ஒன்றியம்.

Click here to follow this blog | இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்

Friday, November 4, 2011

விவஸ்தையின்றி அவஸ்தை படுத்தப்படும் அண்ணா நூற்றாண்டு நூலகம்!

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாட்டின் ஒர்
அங்கமாய் விளங்குவதே நூலகம்.
இங்கு இதனை மாற்றல், கற்றலுக்கே
பங்கமாய் விளைந்து விடாதோ?

ஏடு எதிர் ஏறி, மழலை மாணிக்கவாசகன்

பாடியதே சரியென சாட்சி சொன்னதோர் காலம்.
இன்று மழலையையே காரணம் காட்டி
ஏட்டைப் பிரிப்பது நியாயம் ஆகுமோ?

-குழலவன்

குழந்தைகள் நல மருத்துவமனை கட்ட அண்ணா நுற்றாண்டு நூலகம் எழும்பூருக்கு மாற்றப்படும் என அரசு அறிவித்து உள்ளது.
அண்ணா நுற்றாண்டு நூலகம் அரியதோர் புது அறிவியல் கோவில்.
அறிவியல் மட்டுமன்றி இங்கே அறவியலும் மேலும் பல துறையியலும் அறியலாம், பயிலலாம். தென் ஆசியாவின் மாபெரும் புத்தகப் பெட்டகத்தை சட்டென மாற்றி விடுவது சரியாய் இருக்காது.

சென்னையின் மிகச்சிறந்த கல்விக்கூடங்களை தனது அருகாமையில் கொண்டுள்ளதால் இந்த நூலகத்தினால் பயனடைவோர் ஏராளம். கல்விக்கூடங்கள் மட்டுமல்லாமல் இதன் அருகாமையில் பல ஆய்வுக்கூடங்களும் உண்டு. தென் இந்தியாவின் தலைசிறந்த கல்லூரியான ஐ.ஐ.டி.யும், தமிழ் நாட்டின் தலை சிறந்த பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகமும் இதன் வெகு அருகாமையில் உள்ளன. பல்வேறு மாணவர்கள் கூடும் இது போன்ற இடத்தில் இல்லாமல் வேறு எங்கு இருக்கத் தகும் இத்தகைய தலை சிறந்த நூலகம்.
இதன் அருகாமையில் இருக்கும் வேறு பல கல்விக் கூடங்களாவன பின்வருமாறு: ஐ. ஐ. டி. , அழகப்பா பல்கலைக்கழகம், Madras School of economics, MAC nursing college, CLRI, NIFT, வனவாணி, IIT வளாகத்தில் உள்ள மற்ற பல பள்ளிக் கூடங்கள், Central poytechnic, IGNOU regional center, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கூடம், Asian college of journalism, Film Institute, Dr. Dharmambal polytechnic college for women, MS Swaminathan research foundation, Adyar cancer research institute ( அதில் ஒரு ஆய்வுக்கூடமும் அடங்கும்), Great lakes institute of management, School of architecture and planning, kendriya vidhyalaya, unity public school மற்றும் பல......

மேலும் இது கணிணி மயமாக்கப்பட்ட ஒரு நூலகம். இங்கு ஒரு மின்னணு நூலக வசதிகளும் உள்ளது. அதாவது இங்கே "லேப்டாப்"களும்
கணிணி கருவிகளும், வலை நூல்களும் பயன் படுத்தலாம், படிக்கலாம். இத்தகைய, எங்குமிராத வசதிகளை ஒருங்கே கொண்ட ஒரு நூலகத்தை தகுந்த காரணங்கள் இல்லாமல் வேறு இடத்திற்கு மாற்றுவது வேண்டா வெறுப்பிற்கு வழி வகுப்பதாய் அமைகிறது.

எழும்பூரில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. மேலும் அப்படி ஒரு மருத்துவமனை அமைப்பது வரவேற்கத்தக்கது தான் என்றாலும், இந்த நூலகத்தை இடம் பெயர்துத்தான் இதைச் செய்ய வேண்டும் என்று திட்டமிடுவது, தேவை இல்லாதது. ஏற்கனவே, கடந்த சில காலமாய் கோட்டூர்புரம் சாலையில் அடிக்கடி சாலை நெரிசல் ஏற்படுகிறது. நானும் அண்ணா பல்கலக்கழகத்தில் படிக்கையில் இங்கு பெரிதும் அவஸ்த்தை பட்டிருக்கிறேன். இங்கே தேங்கும் நெரிசல் செனோடாப் சாலை முதல் சர்தார் படேல் சாலை வரை போக்குவரத்தை தேக்கி வைக்கிறது. இந்த நிலையில் இந்த சாலையில் மருத்துவமனைக்கு வருபவர்கள் வரிசை கட்டி நெரிசல் தந்தால், பயணிகள் செல்லுமிடம் போய்ச்சேர்ந்தர்ப் போலதான்.

எழும்பூரிலேயே குழந்தை மருத்துவமனையை விரிவாக்கம் செய்தல் மிகச்சிறந்த வழி. முந்தய அரசு செய்த சில நல்ல திட்டங்களையும், அவர்களுக்கு பெயர் வரும் என்பதற்காக மாற்றினால் மக்களிடம்தான் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். எதிரிக்கட்சியின் எதிர்க் கட்சியை இருப்பதைக் காட்டிலும் மக்களின் மனதை ஆளும் காட்சியாய் இருப்பதே புத்திசளித்தமன் அல்லவா? ராசாங்கம் யோசித்தால் நல்லது.

- குலலவன்

Click here to follow this blog | இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்

Monday, August 8, 2011

The return of the patriots!


Yet again an upraisal of the civilians! As glorious as it was in our Freedom struggle!
The second freedom struggle, this time not against the Imperials but against a more powerful demon called corruption, has begun.
Passing the Janlokpal bill is our only demand. Enough is enough! We had seen a lot of corruption and bribery!
Its time that we stand up and say "Stop! We are not fools anymore"
While a 74 year old fasts for your own future, are you going to spend time in petty recreations?
Dont you have the same amount of responsibility & care, that he has for you, on your own self?
When someone is ready to die for you, would you have a problem to just take a leave and live for you?
When you took leave and bunked classes for watching cricket matches, going to cinema and spending time with your friends; are you going to give silly reasons for not helping your motherland when it needs you the most?
August 16 is the final show down, when Anna Hazare starts his Indefinite fast again!
Are going to behave like a patriot or be a mute spectator and let your motherland rot in corruption?
Ask you own heart!! Will you let this happen to your India?? Should India suffer when you are here for her?
Visit http://www.IACchennai.org/ for your next action.
Regards,
Your Co-Citizen of India


Click here to follow this blog | இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்

Thursday, July 14, 2011

தெனாலி ராமனின் ஊழல் பூனையும், கொதிக்கும் லோக்"பாலும்"

ஜன் லோக்பால் சட்டம் வந்தால் ஊழல் ஒழிப்பு நிச்சயம் தீவிரம் அடையும் என்ற எண்ணம் மக்களிடையே வலுத்துள்ளது. பாலை சுவைக்காத பூனையும் உண்டா என்ற கேள்வியையே சவாலாக ஏற்று கிருஷ்ணதேவராயரிடம் வென்று காட்டிய தெனாலி ராமனின் கதை தான் இங்கு நினைவிற்கு வருகிறது. முயன்றால் முடியாத நல்ல விஷயம் இல்லை என்பதற்கு அவரது வெற்றி ஒரு சான்று.


கொதிக்கும் பாலை பூனைக்கு கொடுத்தார் தெனாலி ராமன். பாலின் சூடு பட்டதும் தெறித்து ஓடியது பூனை. அதன் பிறகு எப்போது பாலைப் பார்த்தாலும் பூனை மிரண்டது. இக்காலத்திலும், சில ஊழல் பூனைகள் பால் போன்ற நமது நாட்டின் சத்துக்களையும் வளங்களையும் கபளீகரம் செய்து வருகின்றன. அதிகாரச்சுவை கண்ட இப்பூனைகள், "கொதித்து"ப்போன மக்கள் கொண்டு வரத்துடிக்கும் லோக்”பாலின்” சூட்டைக்கண்டு மிரள்வது தான் இப்போது நடக்கிறது. அந்த ஊழல் பூனை போடும் கூத்துக்களை மக்கள் அறிந்து வைத்துத்தான் இருக்கிறார்கள்.


எப்போது சட்டத்தை வளைத்தே பழகியவர்கள் இப்போது ஒரு சட்டத்தின் முன் தாங்கள் வளைய வேண்டிவரும் என்ற நினைப்பை கண்டு பயப்படுவது வியப்பத்ற்கில்லை.இவ்வாறு நாட்டுமக்கள் நாட்டின் நலனுக்காக ஒன்றுபட்டு நின்று "ஜன் லோக்பால்" மசோதாவை அமல்படுத்தச்செய்தால், ஊழல் பூனை பால் போன்ற சத்தான நமது நாட்டின் வளங்களை சுரண்டவும் ருசிக்கவும் பயந்து விலகுவது உறுதி.



-குழலவன்.



Click here to follow this blog | இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்

ஊழல் ஒழிப்பும் ஊழல் ஒளிப்பும்

நாட்டில் வினோதம் நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு புறம் அண்ணா ஹஜாரேவின் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஊழலை எதிர்த்து போராடி வருகையில், மறுபுறம் அரசு ஊழல் எதிர்ப்பை எதிர்த்து வருகிறது. அண்ணா ஹஜாரே முன்வைக்கும், பொது மக்களால் வரையப்பட்ட "ஜன் லோக்பால்" மசோதாவிற்கு எதிராய் அரசு முன்வைத்த ஊழலை எதிர்க்கும்(?)
"லோக்பால்" மசோதா ஊழலைத்தவிர மற்ற அனைத்தையும் எதிர்க்கிறது.

உதாரணமாய் புகார் கொடுக்கும் ஒருவர், பொய் புகர் கொடுக்காமல் தடுப்பது எப்படி; அவரை எப்படி தண்டிக்கலாம்; ஊழல் புகார் எப்படி வராதபடி செய்யலாம்; வரும் புகார்களை எப்படி தள்ளுபடி செய்யலாம்; யார் யாரை எல்லாம் கண்காணிப்பு வளைடயத்திலிருந்து நீக்கலாம் என்று எல்லாம் மிக கவனத்துடன் பட்டியலிட்டு இருக்கின்றனர். ஊழல் ஒழிப்பை பாதுகாப்பாக பார்க்காமல், ஒரு கூடுதல் வேலையாய், ஒரு அச்சுறுத்த‌லாய்ப் பார்த்தால் இப்படித்தான் நடக்கும்.

ஜன் லோக்பாலில் உள்ளபடி அரசின் லோக்பாலில் குற்றவாளியின் குறைந்த பட்ச‌ தண்டனை 1வருடம் இல்லாமல் வெறும் 6 மாதம் தான். ஆனால் புகாரை நிரூபிக்க முடியாதவனுக்கு அரசின் லோக்பால் கொடுக்கும் தண்டனை 2 வருடம். குற்றவாளியை விட்டுவிட்டு, குற்றத்தை புகார் செய்தவனுக்கு பெரிய தண்டனை கொடுப்பதை, இந்த உலகத்தில் என்ன, வேற்றுகிரகங்களிலும் கூட கேள்விப்பட முடியாது! அரசு "சுவோ மோட்டோ" சக்தியை நீக்கியதன் மூலம், லோக்பால் தானாகவும் செயல் பட முடியாது. அதாவது அவர்களாகவும் எது செய்ய முடியாது, புகார் செய்பவனுக்கும் பாதுகாப்பு இல்லை, நிருபிக்காவிட்டல் தண்டனை, என்று இவ்வளவு கெடுபிடி விதித்தால் பிறகு யார் தான் புகார் கொடுப்பது? யார் நடவடிக்கை எடுப்பது.

இப்படிப்பட்ட சட்டம் ஊழல் ஒழிப்பு சட்டமாக இல்லாமல் ஊழல் ஒளிப்பு சட்டமாகத்தான் அமையும். இந்த சட்டத்தை கொண்டுவருவதால், ஊழல் எதிர்ப்போரை மிர‌ட்டி, லஞ்சத்தையும் ஊழலையும் மறை முகமாக சட்டரீதி ஆக்குவதுதான் மிச்ச‌ம். எனவே இதனை எதிர்த்து "ஜன் லோக்பால்" சட்டத்தை கொண்டு வந்தால் தான் நாட்டிற்கு விடிவுகாலம் பிறக்கும்.
-‍குழலவன்.


Click here to follow this blog | இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்

Sunday, June 12, 2011

இந்தியனாய் இணைந்து நில்!


இந்தியனாய் இணைந்து நில்!








பெற்றவளின் சுரக்கும் பால் அதனையும் தான், அந்தோ!
பணங்காசு பெற்றே தன் பிள்ளைக்கோ விற்றாள்?
கற்றோராய் கனிந்தோராய் குடி நினைந்தோர் எல்லாம்
கைக்காசுக் கேட்டேதான் நட்டாற்றில் விட்டார்!

பற்றெல்லாம் எமக்கிந்த பெரும் நாடேதான் என்றார்,
பெற்றிட்ட பெருஞ்செல்வம் எமதில்லை காண் என்றார்.
உற்றோராய் உறவாடி இருந்த நல்தோழர் உந்தன்
செற்றோர் காண் என உரைத்து கபடத்தால் தான் பிரித்தார்!

நற்றோழா சகக்குடியே ஒரு நாட்டார் பிரிதல் ஆமோ?
வற்றாத சீவநதி சிறுவெயிலில் உலர்ந்திடுமோ?
பட்டிணியாய் நாமிருந்து பெற்ற பெரும் சுதந்திரமும்
பகட்டான ஊழலதன் காலடியில் நசுங்கிடுமோ?

மற்றவரின் குறைமறந்து, ஓரணியில் நாம் திரள்வோம்!
ஒற்றுமையாய் நாமிருந்து பெரும் வளமை இனிபெறுவோம்
வெற்றியெலாம் ஒற்றுமையில் என்பதனை நீ காண்க!
ஊழலதன் வேர் களையும் ஜன்லோக்பால், புவி வாழ்க!

-குழலவன்



Click here to follow this blog | இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்

Thursday, May 5, 2011

United We Stand

42 years of pregnancy and no delivery yet, is the state of lokpal bill. However, the political doctors try to claim their superiority over the civil society by merely trying to delay the Jan lokpal bill still further. Though there were public display of support by the political cream of India, their behind the screen happenings just do take us aback.

The democratic resistance to political procrastination is still being responded by the government cream with hesitations. Some of the media too seems to wag their loyally to their masters. But our confidence still do exist, in a much stronger way, on the honest media. To seek clarity amidst ambiguities one must understand the intentions of the speaker. There cannot be a second thought on the fact that, Jan lokpal is very much essential for our country and would serve a lot of good. Thus it become the common interest of the nation. Anything that tries to derail the common interest of the country, directly or indirectly, shall be termed evil. Thus a “good force”, support enacting Jan lokpal bill in all ways, while the evil opposes Jan lokpal in every possible way.

Strategically speaking, the ways of attacks are laid down as “Saama, Dhaana, Baedha and Dhanda” in Artha shaastra. This means “peace talk, luring, disturbing unity and direct attack” respectively. This is what the political cream had been doing. Saama : There were attempts made to dilute the resolve of national heros right at the fasting itself, but in vain. Alluring a calm and stable mind couln’t be that effective. Bedha, is what is being used, with full force now. Unless we stand united the evil powers might succeed. Dhanda is powerless against a peaceful protest in a democracy. So lets now concentrate on the Bedha part, as this is the most viable weapon against the national cause.

It first started with smear campaigns, accusing the members of the draft committee to be unclean. However, the slammers, obviously, were not of impeachable honesty. Later there were attempts to misinterpret any word from Anna Hazare and his company. But that too didn’t seem very successful. The latest are attempts made on diluting the unity of the supporters of Anna Hazare and India Against Corruption. Unity is the only means by which we can wade off such attempts. When we all are aware that this 5 member team is just helping in preparing the key points of the law and don’t seek any benefit by doing so, why give room for thoughts that divert you, by making accusation on them or calling us divided.We have to keep in mind that the members of the drafting committee just point out the weaker points of the law, welcome comments from any indian citizen to correct it and urge the government to pass the bill. They don’t even ask to be made as the members, of the autonomous institute called lokpal, which will be created once the bill is passed. Remember that they don’t even get paid for this noble service. Don’t we understand, that it is the shear ego of the politicians who try to cover up their inability by false accusations on our heros.

We shall always make our stand clear, that we shall always be united, in this second freedom struggle. Remember, any news that makes you think, against India Against Corruption and Anna Hazare would just be another attempt to weaken us. We all should ensure that the motives of the clique are not favoured, at any means, at any cost and to any extent. Ask yourself… they have already defeated the bill several times and they still can, if we don’t stand up strong and united. Ask yourself…. What happened to the other bills like the women reservation bill which still couldn’t be passed but very much anticipated; Will we let Jan lokpal one of such unpassed bills? Ask youself… who is benefited if Jan lokpal is passed and who won’t like it to have such a strong anti-corruption law; would you stand between our country and its prosperity? And finally ask youself… wont you be a responsible citizen to seek the well being of the country? wont you be a the dutiful family member and fight for your own family and free your children from corruption? would you leave behind a corrupt society for your own children to suffer? Are not you the proud Indian who always believes and strives for the country? And are not you that human being who can say “ I am a human being and I stand for good of human race”.

It’s the hour of test of our patriotism. Will you stand the test? Will you be united? Will you survive the test to be presented with a corruption free society? Won’t you be the part of India’s second freedom movement, India Against Corruption.





Click here to follow this blog | இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்

Thursday, April 21, 2011

ஜன் லோக்பால் சட்டம்!

சட்டம் வந்தது! சட்டம் வந்தது!
சத்தம் செய்ததும் சட்டம் வந்தது!
திட்டம் வந்ததும் நட்டம் செய்திடும்
ஊழல் பேயினை மட்டம் செய்தது!

சட்டம் செய்திட சபைக்கு வந்தவன்
கொட்டம் செய்தல் மட்டும் செய்தான்!
திட்டம் தவிடாய் செய்து - அவனவன்
மட்டும் வாழ்வதில் பட்டமே பெற்றான்!

குட்டக் குட்டக் குனிந்த குப்பன்
சீற்றம் கொண்டு சீறிய பின்னர்,
சட்டம் வந்தது! சட்டம் வந்தது!
கொட்டம் போட்டதை மட்டம் செய்தது!

பட்டம் பெற்றவன், பாமரன், கிழவன்,
முற்றும் துறந்த முனிவன், வணிகன்,
மாணவன், சேவகன், நடிகன் எனபலர்
சத்தம் செய்ததும் சட்டம் வந்தது!

துக்கம் களைந்திட சட்டம் வந்தது!
தூக்கம் கலைந்ததும் சட்டம் வந்தது!
ஊழல் போக்கிட சட்டம் வந்தது!
சத்திய கிரகம் சட்டம் தந்தது!

சட்டம் வந்தது சட்டம் வந்தது!
"ஜன் லோக் பால்" சட்டம் வந்தது!
சுத்தம் செய்தது! சுத்தம் செய்தது!
ஊழலை ஒழித்து சுத்தம் செய்தது!
-குழலவன்


Click here to follow this blog | இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்