Monday, December 12, 2011

வரம் தா கண்ணா!

தயிரைக் கடைந்த வெண்ணையைத் திருடுகிறாய்... இன்று
உயிரைக் கடைகிறாய் ... எதைத் திருடுவாயோ கண்ணா!!

சட்டியில் இருப்பதே அகப்பையில் வருவதால்
புத்தியில் நன்மையே சமைத்திடு கண்ணா

கலங்கிடும் போதும் நா கெட வேண்டாம் ‍ நிலை
தவறிய போதும் நெறி விட வேண்டாம்
பழகிய மனிதர்கள் கை விட்டாலும் ‍ கொண்ட‌
அழகிய ஒழுக்கங்கள் கை விட வேண்டாம்

இன்றிவை வரமென நீ தந்திடுவாய்
அன்றியும் நீயே செய்வித்திடுவாய்
உள்ளும் புறமும் உறைவாய் கண்ணா
உள்ளத்தின் உறவாய் மலர்வாய் கண்ணா!!

No comments:

Post a Comment