Sunday, September 16, 2012

உலையை உருட்டாதே

இடிந்த கூரையை அடுத்த உலையை
   மீசை பூனை கவிழ்க்குமோ?

அலையைக் காட்டி உலையை அணைக்கும்
   காலம் என்று மாறுமோ?

ஏழை வயிறு பெற்ற மக்களின்
   அறியாமை என்று விலகுமோ?

ஏழைகள் அண்டும் உலையை உருட்டி
   உண்போர் உணவு செரிக்குமோ?

நான் பூனையைக் கண்டு நோவதா?
    இல்லை உலையை கட்டிக் கொள்வதா?
அறியா மக்களை பெற்று எடுத்தவள்
    உலை கஞ்சியையும் துறப்பதா?

                ‍                        -குழலவன்

No comments:

Post a Comment